கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சிதம்பரம் சம்பந்தக்கார தெருவில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ 22 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதனை சனிக்கிழமை சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜா, அப்பு சந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.