திருவள்ளூர், செப் 27- சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட முதல் மாநாடு அண்மையில் மாவட்ட அமைப்பாளர் ஜி. சுப்ரமணி தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்றது. ஜி. ஹேம லதா கொடியேற்றினார். பச்சையம்மாள் வரவேற்றார். அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ. இளங்கோவன் துவக்கி வைத்தார். ஜி. மணி வேலை அறிக்கை முன் வைத்து பேசினார். எஸ்.வசந்தா நிதிநிலை அறிக்கை வாசித்தார். ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. சுந்தரம்மாள், பொதுச் செயலா ளர் பி. இராமமூர்த்தி சிறப்புரையாற்றினர். அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ஜெயராமன், மாவட்ட இணைச் செயலாளர் ஜி. கே. கேசவன், சென்னை மாவட்ட நிர்வாகி கே. தங்கம், என். நிரஞ்சனிதேவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சண்முகம் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக ஜி. சுப்ரமணி, மாவட்ட செயலாளராக ஏ. மணி, மாவட்ட பொருளாளராக எஸ். வசந்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.