districts

img

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

சென்னை, நவ.9 – பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (நவ.8) மத்திய சென்னையில் 6 மையங்களில் கையெழுத்து  இயக்கம் தொடங்கியது. இந்தியா முழுவதும் செயல்படும் 100க்கும் மேற்பட்ட தலித் உரிமைகளுக் கான அமைப்புகள் இணைந்து பட்டியலின  மக்களுக்கான கோரிக்கை சாசனத்தை  உருவாக்கி உள்ளன. அதன்தொடர்ச்சியாக நவ.17 அன்று  சென்னையில் மாநில அளவிலான தலித் உரிமைக்களுக்கான உச்சி மாநாடும், டிச.4 அன்று டெல்லியில் பேரணி யும் நடைபெறுகிறது. இந்த கோரிக்கை களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் மத்தியசென்னை மாவட்டத்தில்  ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு பகுதி புஷ்பா நகரில்  முன்னணியின் மாநில துணைச் செயலாளர்  பி.சுகந்தியும், எழும்பூர் பகுதி கே.பி.பார்கில்  மாற்றுத்திறனாளிகள் சங்க பொருளாளர் ந.மனோகரனும், வில்லிவாக்கம் பகுதி, ஐசிஎப்-ல் எஸ்சி, எஸ்டி சங்க பொதுச் செயலா ளர் எஸ்.மங்காரமும் தொடங்கி வைத்தனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமியும், அண்ணாநகர் பகுதி தா.பி.சத்திரத்தில் முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் பி.சுந்தரமும், துறைமுகம் தொகுதி பி.ஆர்.எம்.கார்டனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளியும் தொடங்கி வைத்து பேசினர். இந்த நிகழ்வுகளில் முன்னணியின் மாவட்டச்செயலாளர் எம்.ஆர்.மதியழகன், துணைத்தலைவர்கள் கா.புகழேந்தி, எம்.முத்துராஜன், துணைச் செயலாளர்கள் லோ.விக்னேஸ்வரன், இ.சாண்டில்யன், பி.கே.மூர்த்தி, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.