districts

img

கோவிந்தசாமி நகர் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி உண்ணாநிலைப் போராட்டம்

மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி கோவிந்தசாமி நகர் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செவ்வாயன்று (ஜூலை 5) அதேபகுதியில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பாளர் விஜயா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பேசினர்.