வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் கடந்த 3 வருடங்களாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சென்னை மாவட்ட மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உண்ணாநிலை போராட்டம் செவ்வாயன்று (பிப். 13) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் என்.டி.முருகைய்யன், மாவட்ட பொருளாளர் குமார், அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி ஆகியோர் பேசினர்.