வேலூர், ஜூன் 5 -
அணைக்கட்டு அருகே அல்லேரிமலை அத்திமரத்துக் கொல்லை கிராம மக்களுக்கு சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அல்லேரிமலை அத்திமரத்துக் கொல்லையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு சிறுமி தனுஷ்காவை பாம்பு தீண்டியது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதிய சாலை வசதி யில்லாததால் உயிரிழந்தார். எனவே உடனடி யாக அந்த மலை கிராமத்திற்கு சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதி களை உடனடியாக செய்து தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அங்குள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் கூடுதல் ஆசிரி யர்களை நியமிக்க வேண்டும். பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன.
மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ். மகாலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.nஜ.சீனிவாசன், ப.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம்வேலூர், வட்டச் செயலாளர்கள் ஆர்.சுடரொளியன், கே.பாண்டுரங்கன் ஆகியோர் பேசினர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தியை சந்தித்து மனு அளித்த னர். மனுவைப் பெற்று கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.