districts

img

20 ஆண்டு காலப் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி சிபிஎம் மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு கிராம மக்கள் நன்றி!

கள்ளக்குறிச்சி, ஜூன் 14-

     கள்ளக்குறிச்சி மாவட் டம், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ளது உப்பூர் கிராமம். இந்த கிராமத்திலுள்ள சுடுகாடு நிலத்தை தனிநபர் ஒருவர் கடந்த 20 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து வந்தார். இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் பலனில்லை.

    இதனையடுத்து, கல்வ ராயன் மலை மக்களின் வனம் மற்றும் நில உரி மைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்து கொண்டு சென்றனர். பிறகு, அந்த சுடுகாட்டை மீட்டு பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்க மும் களத்தில் இறங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தியது.

   இதனையடுத்து, ஜூன் 13 அன்று அந்த கிரா மத்திற்கு வந்த ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின துறையின் மாவட்ட துணை ஆட்சியர் கதிர் சங்கர், கல்வராயன் மலை வட்டாட்சியர் குமரன், உப்பூர் கிராம நிர்வாக அலுவலர், நில அளவை யர் உள்ளிட்டோர் கிராம மக்கள் மற்றும் மர்ர் க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர்களுடன் அமைதி பேச்சு நடத்தினர்.

   அப்போது, நிலத்தை அளவீடு செய்து சுடு காட்டிற்கான பாதையை அமைத்து கொடுப்பது என்றும் நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து தருவது என்றும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் ஏற்பட்டது. தொடர் நடவடிக்கையாக, உப்பூர் கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்த சுடுகாட்டு நிலத்தை கிராம மக்கள் மற்றும் போராட்டக்குழு தலை வர்கள் முன்னிலையில் முழுமையாக அளவீடு செய்து கொடுத்தனர். தனி நபரால் தட்டிப் பறிக்கப் பட்ட உரிமையை மீட்டெடுத்து பாதை மற்றும் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலை வாழ் மக்கள் சங்க தலை வர்களுக்கு உப்பூர் கிராம மக்கள் நன்றி தெரி வித்திருக்கிறார்கள்.  

   இப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெள்ளிமலை ஒன்றியச் செயலாளர் வி.அண்ணாமலை, மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லி பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. ஏழுமலை, வே.ஏழுமலை தமிழ்  நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பொன்னு சாமி, கல்வராயன் மலை செயலாளர் ஏ. செல்வ ராஜ்,பி. சடையன், தங்கராசு, அண்ணாமலை,ஆர். வெங்கடேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.