சென்னை, மே 18-
டாக்சி பயணத்திற்கான இணையதளமான இன்டிரைவ் ‘இந்த மாதத்தின் ஓட்டுநர்’ என்னும் புதிய பிரச்சார திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்ட காலத்தில் இன்டிரைவ் மூலம் அதிக பயணங்களை மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை இந்நிறுவனம் வழங்க உள்ளது.
அதில் முதல் இடம் பிடிப்பவருக்கு மோட்டார் சைக்கிளும், அதனைத் தொடர்ந்து மற்ற இடங்களை பிடிக்கும் 10 பேருக்கு ஸ்மார்ட் போன்களையும் வழங்க உள்ளது. இந்த திட்டத்தில் சேர ஓட்டுனர்கள் தங்களைப் பதிவுசெய்து, தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
‘எங்களின் இன்டிரைவ் தளம் மக்களுக்கு மிகவும் நியாயமான கட்டணத்தில் பயணத் தீர்வுகளை வழங்கி வரு கிறது’ என்று நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய ஓட்டுனர் குழுத் தலைவர் செர்ஜி கோண்ட்ருட்ஸ்கி கூறி யுள்ளார்.