districts

செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது

செங்கல்பட்டு , டிச.11- தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த  சரக்கு ரயில் செங்கல் பட்டு அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டது. 10-க்குமேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. அதை சீர்  செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த விபத்து காரண மாக ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை  செல்லும் ரயில்கள் சிங்கப் பெருமாள் கோவில் ரயில்  நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாம தமாக இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்க ளில் இருந்து வரும் ரயில் கள் நேரத்திலும் தாமதம்  ஏற்பட்டுள்ளது.