districts

img

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வன உரிமை சட்டம் 2006ல் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாயன்று (ஜூன்.27)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன் தலைமையில் விச மாவட்டநிர்வாகிகள்  கே.நேரு,என்.சாரங்கன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.செல்வம், சீனிவாசன், கைத்தறி  மாவட்ட செயலாளர் வி.சிவப்பிரகாசம் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.