ஒடிசா ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ஞாயிறன்று (ஜூன் 4) மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் அருகே இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 91வார்டு பெண்கள் கிளை செயலாளர் எஸ்.சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரவாயல் பகுதி செயலாளர் வி.தாமஸ், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பிச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.