districts

img

நெல்லையில் சிபிஎம் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் சிபிஎம் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், திருப்போரூர், சூனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மதுராந்தகம் படாளம் கூட்டுச்சாலையில் எம்.எஸ்.அர்ஜுன் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா மாவட்ட குழு உறுப்பினர் ஜி.மோகனன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர் .