8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேர வேலையாக மாற்ற, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி அசோக்லேலண்ட் பவுண்டரி டிவிஷன் எண்ணூர் யூனிட், சி.ஐ.டி.யு அணி, உழைப்போர் உரிமைக் கழகம் சார்பில் வியாழனன்று (ஏப். 27) ஏ.சிவசங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. வட சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயராமன், அசோக்லேலண்ட் பொதுச்செயலாளர் எம்.நாராயணன், நிர்வாகிகள் எம்.கருணாநிதி, கே.நாராயணன், கி.சுரேஷ், இரா.சதீஷ், கே.புவனசேகர், சி.தவமணி, என்.ரமேஷ்குமார், டி.தனுஷ்கோடி, இரா.குமரன் ஆகியோர் பேசினர்.