திருவள்ளூர், நவ.1- திருவள்ளூர் அருகில் உள்ள பேரத்தூர் கிராமம், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சங்கர் என்பவர் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிறு தொழில் (அரிசி வியா பாரம்), செய்ய தாட்கோ மூலம் கடன் உதவி பெறுவ தற்கு முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து நேர்காணலில் பங்கேற்றார். பின்னர் வங்கி மேலாளர் கடன் அனுமதி பெற்று, ஒப்புதல் படிவம் III மூலம் ரூ. 4,98,750 கடன் ஒப்புதல் தாட்கோ நிறுவனத் திற்கு வழங்கிய பிறகு திருவள்ளூர் மாவட்ட தாட்கோ நிறுவனம் மானிய தொகை ரூ.1,57,500 வங்கிக்கு அனுப்பியுள்ள னர். ஆக மொத்தம் ரூ. 5,25,000 டிடி-யை 10.10.2023 அன்று வங்கி மேலாளர் மூலம் பயனாளிக்கு வழங் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13.10.2023 அன்று வங்கி மேலாளர் திடீரென விசாரணை என்ற பெயரில் பயனாளியின் வீட்டுக்குச் சென்று பார்வை செய்து விட்டு உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாது என வங்கி கடனை நிறுத்தி வைத்துள்ளார். இதனால் சங்கர் அதிர்ச்சி யடைந்தார். உள்நோக் கத்துடன் செயல்படும் வங்கி மேலாளரின் இந்த அராஜக செயலை கண்டித் தும், ரத்து செய்த வங்கி கடனை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து வங்கி கடன் மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 3 அன்று திருவள்ளூர் பஜாரில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதனை தொடர்ந்து வங்கியின் கிளை மேலா ளர் விவேக் செவ்வாயன்று (அக் 31), கட்சியின் தலை வர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது முழு தொகைக் கான காசோலையை சங்கரிடம் வங்கி மேலாளர் வழங்கினார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இதில் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்தி ரன், வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்டக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், எஸ்.கலையர சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.