districts

img

டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை,செப்.10- சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார்  சோனியா தம்பி இவர்களது மகன் ரக்சன் (வயது4) சிறு வன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர்.  அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறு வனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ரக்சனை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.  டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.