அம்பத்தூர், ஜன. 25- மர்மக் காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வர் கோதண்டராமன். இவர் கார் டிரைவர். இவரது மனைவி நிவேதா. இவர்களது குழந்தை மகிழினி (3). இந்நிலையில் குழந்தைக்கு புதனன்று (ஜன. 24) திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை வியாழன்று (ஜன. 25) காலை இறந்தது. குழந்தையின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள் ளது. பரிசோதனை முடிவு வரும் 29ஆம் தேதி கிடைக்கும் என்றும், பரிசோதனை முடிவு கிடைத்த பிறகுதான் குழந்தை என்ன காய்ச்சலில் இறந்தது என்பது தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.