சென்னை, ஜூன் 1- கடுமையான மார டைப்பு ஏற்பட்ட 95 வயது முதியவருக்குச் சென்னை யில் முதல் முறையாக லீட்லெஸ் பேஸ்மேக்கருடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மார்பு சவுகரியம், ரத்த அழுத்தம், மூச்சிரைப்பு மற்றும் இடது தோள் வலி சிகிச்சைக்காகச் சென்னை ஃபோர்டிஸ் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவரது இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும், பல்வேறு மாறுபாடுகளுக்கு உள்ளானது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை, இயக்கு நரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் சஞ்சீவ் அகர்வால் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர். தீவிர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்படும் முன், முக்கிய உறுப்புகள் சீராக இயங்க, ரத்தத்தை மென்மை யாக்கும் தின்னர்கள் மற்றும் ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளும் உடனடியாகச் செலுத்தப்பட்டன. ஆஞ்சி யோகிராஃபியில் நோயாளி யின் மாரடைப்புக்குக் காரணமான ரத்த நாளத் தில் அடைப்பும், மற்றொரு ரத்த நாளத்தில் கூடுதல் அடைப்பும் உறுதியானது. எனவே உயிரைக் காப்பாற்ற ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் இடது முன்புற இறங்கு தமனியில் இரு ஸ்டெட்ண்டு கள் பொருத்தப்பட்டன. ரத்த நாளங்களில் சுண்ணாம்புக் காரை படிந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. இரு நாள்கள் கழித்து நோயாளிக் குக் இதயத் துடிப்பு குறையத் தொடங்கியது. எனவே நோயாளியின் இதயத் துடிப் பைச் சீராக்க பேஸ் மேக்கர் பொருத்த வேண்டிய அவ சியமும் ஏற்பட்டது என்று டாக்டர் அகர்வால் கூறினார்.