கிருஷ்ணகிரி,ஜூன் 22-
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் வட்டம், அந்திவாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 8000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், காவேரிப் பட்டினம், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிட மிருந்து வாங்க நெல் மூட்டை கள் ரயிலில், லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ண கிரி மாவட்டம்ஓசூர் வட்டம் அந்திவாடியில் அரசுக்கு சொந்த மான காலி இடத்தில் 8000 டன் நெல் மூட்டைகள் பல குவியல்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பல டன் கணக்கான நெல் மணிகள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கிறன. சில நாட்களுக்குமுன்பு பெய்த மழையில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள மூட்டைகள், கொட்டிக் கிடக்கும் நெல் மணிகள் நனைந்துள்ளது.
சில பகுதி நெல் மூட்டைகள் மூடப்பட்டாலும், சிலஇடங்களில் உள்ள ஓட்டை களால் மூட்டைகள் நனைந்து ஈரமாக உள்ளதாகவும் தெரிகிறது.
திடீர் திடீரென மழை பெய்யும் ஓசூரில் பருவ மழைக்கு வாய்ப்புள்ள நிலையில்திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் முழுவதுமாக நனைந்து நெல்மணிகள் முளைவிடும், அழுகியும் சேதமடையும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கீழே கொட்டிக்கிடக்கும் நெல்மணிகள் அதிகமான ஈரத்துடன் கணப்படுகிறது.இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை பார்த்து விவசாயிகள்,பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கேட்டதற்கு முட்டைகளின் மீது காற்று பட வேண்டும் என்பதால்காலை நேரங்களில் மூட்டைகளை மூடாமலும், மீண்டும் மாலையில் பெரிய, பெரிய தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடி வைப்பதாகவும். இன்னும் 3,4 நாட்களுக்குள்அனைத்து நெல் மூட்டைகளும் மாவட்டத்திலுள்ள அரவை மில்களுக்கு அனுப்பட்டு, அரைக்கப்பட்டுதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப் படும் என்றுகூறுகிறார்.நெல் மூட்டைகள் மழையில் நனை வது குறித்து விவசாயிகள் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சரயு தலையீட்டின் பிறகு மூட்டைகள்அனைத்தும் தற்போது தார்பாலின் பாய்களால் மூடப்பட்டுள்ளது.
எனவே மழையில் நனைந்து பெரும் நட்டம் ஏற்படுவதை தவிர்க்க 8000 டன் நெல் மூட்டை களையும் உடனடியாக பாது காப்பான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு மாற்றவேண்டும், அல்லது அடுக்கிவைக்கப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உடனடியாக மேற்கூரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.