காஞ்சிபுரம்,அக்.24- இந்தியாவின் நகர எரிவாயு வினியோகப் பிரிவில் ஒரு முன்னணி நிறுவனமான ஏஜி அன்ட் பி பிரதம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் புதிய சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிலை யங்களை தொடங்க உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும். தூய்மை யான மாற்று எரிபொருளை வழங்குவதற்கும் எரிவாயு அடிப்படையிலான பொரு ளாதாரத்திற்கும் இது உதவும் என்று ஏஜி அன்ட் பி பிரதம் காஞ்சிபுரம் மண்டல தலை வர் என்.டி.திருக்குமரன் கூறினார். திருப்பெரும்பதூரில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், காஞ்சிபுரம் மண்ட லத்தில் குழாய் மூலம்வீடுகள், வர்த்தக நிறு வனங்கள் மற்றும் தொழிலகங்களுக்கு சிஎன்ஜி எரிவாயு விநியோகம் செய்யப் படும் என்றார். சரக்கு போக்குவரத்து மையங்கள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆகியவற்றிற்கு சேவை வழங்கும் வகையில் ஒரகடம், பிள்ளைப்பாக்கம் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்கா போன்ற முக்கியமான அமைவிடங் களில் இயற்கை எரிவாயுவிற்கான தேவையை தமது நிறுவனம் பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார். “இயற்கை எரிவாயுவைப் பெறுவதற் கான வசதியை மேம்படுத்துவதன் மூலம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங் களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாவட்டங் களாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் எரிபொருள் செலவு களில் 45விழுக்காடு வரை கணிசமான சேமிப்பை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.