சென்னை, நவ. 19- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2 வழித்தடம் 4இல் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்தி வார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 விழுக்காடு வெற்றிகரமாக நிறைவடைந் துள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலை யத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு செய்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள் ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப் பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொதுப்பயன் பாட்டில் உள்ள உயர் மின்விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலை தொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத் திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறு வடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர் வழிப் பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லா மல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல் படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார அமைக் கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வழியில் மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெற்று வந்த தால் அவ்வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வருவதா கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரி வித்துள்ளது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஜிசி2-AEON நிறுவனத்தின் குழுத் தலைவர் முருக மூர்த்தி, எல் அண்டு டி நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.