districts

img

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 671 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் திங்களன்று 788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாயன்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 671 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 34 லட்சத்து, 46 ஆயிரத்து 388 பேராக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 2 ஆயிரத்து 375 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 96 ஆயிரத்து 78 பேராக ஆக உயர்ந்துள்ளது. மேலும், திங்களன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், செவ்வாயன்று 8 பேர் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.