சென்னை, மார்ச் 2 - சென்னையை ஒட்டி புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநக ராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதனன்று (மார்ச்2) நடைபெற்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 12 நகராட்சி கள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 750 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், 2 பேரூராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்ததால் அங்கு தேர்தல் நடைபெற வில்லை. புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாநக ராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாநக ராட்சி ஆணையர் நாராயணன் பதவி பிரமா ணம் செய்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 31 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்கள், பா.ஜ.க. 1 இடம், சுயேட்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதில் முதல் மேயர், துணை மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 306 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 306 பேர் புதனன்று பதவி ஏற்றுக்கொண்டனர். புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஆவடி மாநகராட்சி 48 வார்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளில் 141 வார்டு உறுப்பினர்களும் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப் பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,
இதில் திருத்தணி நகராட்சி பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலா ஒரு வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர். திருவள்ளூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் வார்டு வாரியாக கவுன்சிலர் கள் அழைக்கப்பட்டு பதவியேற்றனர். விழா வில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டு கவுன்சிலர்களுக்கு ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் அமைச்சர் சாமு.நாசர், திருவள்ளூர் நாடாளு மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.