districts

img

குடிமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் 74 குடும்பங்கள் மனு

கடலூர், ஆக.19- கடலூர் பாதிரிகுப்பம் நத்தவெளி சாலை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடலூர் பாதிரிகுப்பத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த நாங்கள்  நிரந்தர மாக வசித்து வந்தோம். கடந்த 2018-ம் ஆண்டு  பாதிரிகுப்பம் பஞ்சாயத்து இடத்தில் வீடு கட்டி  குடியிருந்த 74 குடும்பங்களையும் அப்புறப்படுத்துமாறு நெடுஞ்சாலை துறை அறிக்கை அனுப்பி வீடுகளை இடித்து விட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக நிரந்தமாக குடியிருக்க வீடு இல்லாமல் அனைத்து மக்களும் மழை, வெயில், காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். சாலை ஓரங்க ளில் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளின்  கல்வி கேள்வி குறியாக உள்ளது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பொது மக்கள் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதுவரையிலும் மனுக்கள் பரீசீலிக்கப்படவில்லை. மேலும் இந்த 74 குடும்பங்களும் வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளது. எனவே அரசு நத்தம் புறம்போக்கில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.