districts

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 73.88 விழுக்காடு வாக்குப் பதிவு

திருவண்ணாமலை, ஏப். 20- திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், 73,88 விழுக்காடு வாக்கு கள் பதிவாகி உள்ளன. தமிழகம் முழுவதும் வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்தத் தேர்தலுக்காக, திருவண்ணாமலை மக்களவைத்  தொகுதிக்குள்பட்ட திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், திருப்பத்தூர் மாவட்டத் தைச் சேர்ந்த திருப்பத்தூர், ஜோலார் பேட்டை உள்ளிட்ட 6 சட்டசபைத் தொகுதிகளில் மொத்தம் 1,722 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 533 ஆண்கள், 7 லட்சத்து 78 ஆயிரத்து 445 பெண்கள், 121 இதர பாலினத்தவர் என  மொத்தம் 15 லட்சத்து 33 ஆயிரத்து 99  வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது. தொகுதிக்குள்பட்ட 1,722 வாக்குச் சாவடிகளிலும் வெள்ளியன்று (ஏப்.19) காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி முதல் பல இடங்களில்  நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்தனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 73.88 விழுக்காடு வாக்குகள்  பதிவானது. ஜோலார்பேட்டை சட்டசபைத் தொகுதியில் மொத்தமுள்ள 2  லட்சத்து 38 ஆயிரத்து 198 வாக்காளர் களில், 76.15 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.திருப்பத்தூர் சட்ட சபைத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 30 ஆயிரத்து 929 வாக் காளர்களில், 73.3 சதவீத வாக்காளர் கள் வாக்களித்தனர். செங்கம் (தனி)  சட்டசபைத் தொகுதியில் மொத்த முள்ள 2 லட்சத்து 79 ஆயிரத்து 326  வாக்காளர்களில் 75.51 சதவீத வாக்கு கள் பதிவானது. திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 78 ஆயிரத்து 405 வாக்காளர்களில் 70.09 சதவீத வாக்குகள் பதிவானது.கீழ்பென்னாத்தூர் சட்டசபைத் தொகுதியில் மொத்தமுள்ள 2  லட்சத்து 56 ஆயிரத்து 408 வாக்காளர் களில் மாலை 6 மணி நிலவரப்படி, 74.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கலசப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து  49 ஆயிரத்து 833 வாக்காளர்களில் 74.11  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆக மொத்தம், திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் அடங்கிய 6 சட்டசபைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 15 லட்சத்து 33 ஆயிரத்து  99 வாக்காளர்களில் 74.22 சதவீத வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.  இதேபோல் ஆரணி மக்களவை தொகுதியில் 75.74 விழுக்காடு வாக்கு கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.