சென்னை, ஏப். 19- கடுமையான மாரடைப்பு காரணமாக, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்த 61 வயது பெண்ணுக்கு நாட்டிலேயே முதல் முறையாக ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி அவரது உயிரை சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அதிக வயதான பெண் ஒருவருக்கு இந்த முறையி லான சிகிச்சை அளிக்கப் பட்டு இருப்பது இந்தி யாவிலேயே இது முதல் முறை என்று சென்னை பூந்த மல்லி சாலையில் உள்ள குமரன் மருத்துவமனையின் பேராசிரியர் அஜித் அனந்த கிருஷ்ண பிள்ளை மற்றும் டாக்டர் சித்தார்த்தன் ஆகியோர் கூறினார். இவர்களது தலைமையி லான மருத்துவ நிபுணர் குழுவினர் 120 நிமிடங்க ளுக்கு மேல் இந்த அறுவை சிகிச்சையை செய்தது . இதற்கு பிறகு, நோயாளி நன்கு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார். அந்த பெண்ணுக்கு வயது காரணமாக, அவரது ரத்தக் குழாயில் அதிக கால்சியம் படிந்திருந்ததால் அவருக்கு வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட வில்லை. மாறாக அவருக்கு ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரோட்டோ பிளேட்டர் கருவியுடன் பொருத்தப்பட்ட வடிகுழாயை அடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக உட்செலுத்தி ரத்த ஓட்டத்துடன் பாதுகாப்பாக செல்லக்கூடிய சிறிய துகள்களாக அந்த கால்சி யம் படிமங்களை உடைத்து தூளாக்கப்பட்டன என்று நுண்துளையீட்டு இருதய நோய் நிபுணருமான அஜித் அனந்தகிருஷ்ண பிள்ளை கூறினார்.