மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 22), வடசென்னை அனல் மின் நிலையம் அருகில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்.