districts

img

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது

கடலூர், செப்.9- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ. அவரது மகன் இளைய ராஜா. திமுக உறுப்பினராக உள்ளார்.  இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (செப்.8) மாலை தனது வயலில் உள்ள செங்கல் சூளையில் இருந்து காரில் புறப்பட்டார்.  அப்பொழுது ராஜசேகர் மகன்கள் ஆட லரசன் அவரது அண்ணன் புகழேந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொண்டு இளையராஜாவை துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த இளையராஜாவை  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடைபெற்றது என தெரியவந்ததையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆற்றல் அரசு, புகழேந்தி உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதில் விஜயகுமாரை பிடிக்கச் செல்லும் பொழுது தப்பி ஓட முயன்றார். அப்பொழுது கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு சிகிச்சைக்காக விருத்தா சலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து இரண்டு கை துப்பாக்கியை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை  தேடி வருகின்றனர்.