districts

img

ரூ.58.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, செப். 7- திருவொற்றியூரில் ரூ. 58.64 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் காணொலி மூலம் வியாழனன்று (செப். 7) திறந்து வைத்தார். திருவொற்றியூர் மணலி இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய் மீது போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 58.64 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 18 மாதங்க ளில் முடிக்க வேண்டிய இந்த மேம்பால பணி பல்வேறு காரணங்களால் முடிக்கப்  படாமல் தாமதமாகியது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் மணலி-சேக்காடு வியா பாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட மேம்பால பணி துரிதப்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து இந்த உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வியாழனன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் ஆர். ஜெயராமன், சொக்கலிங்கம்,  வியாபாரி கள் சங்கத்தின் தலைவர் டி.ஏ.சண்முகம், பொதுச்செயலாளர் பூபால கிருஷ்ணன், பொருளாளர் நாராயணலால், நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் மலர்விழி, கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.