கள்ளக்குறிச்சி,ஆக.28- கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 97 பயனாளிகளுக்கு ரூ.55.17 லட்சத்தில் அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். இம் முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலை வர் புவனேஸ்வரி பெரு மாள், தியாகதுருகம் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி,மாவட்ட திட்ட மேலாளர்( தாட்கோ) பியர்லின், வட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். முன்னதாக, வேளாண்மை துறை, மருத்துவ துறை, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டார்.