கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இன்று முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து
பயணிகள் கொதிப்பு!
சென்னை,ஜூலை 22- தாம்பரம் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடை பெற உள்ளதால் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதிகாலை முதல் காலை 9:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். மதியம் 1 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். ரத்து செய்யப் பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக சிறப்பு மின்சார ரயில்கள் இடை இடையே இயக்கப்படும். பயணிகளின் சிரமத்தை குறைப்பதற் காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகத்திறகு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு, அறிவிப்பு பலகை கள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள் கள். டிவி சேனல்கள், சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும், டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்ட மிடும்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆடை அடிப்படையிலான பாகுபாடு ஏற்க முடியாது ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் அறிக்கை
சென்னை, ஜூலை 22 - இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் அணியும் வேட்டிக்கு அதிக வரவேற்பு இருப்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததாக ராம்ராஜ் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நான் இங்கிலாந்தில் இருந்தபோது அங்கு வேட்டிக்கு அந்த நாட்டில் உள்ள மரியாதை மற்றும் இந்தியர்களுக்கு வேட்டியின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் அங்குள்ள மக்கள் எப்படி மகிழ்ச்சி அடை கிறார்கள் என்பதை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் பக்கீரப்பா என்னும் ஒரு விவசாயி இந்தியாவிலுள்ள பெங்களூர் நகரில் வேட்டி கட்டியதன் காரணமாக ஒரு வணிக வளாகத்தின் உள்ளே நுழைய மறுக்கப்பட்டதை அறிந்து தாம் கலங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆடை அடிப்படையிலான பாகுபாடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஒரு சமூகமாக நாம் விரும்பும் சமத்துவம் மற்றும் மரியாதை மதிப்புகளுக்கு அது எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளி உணவை அனுமதிக்க கோரி கைதிகள் போராட்டம்
சென்னை, ஜூலை 22- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெளி உணவை அனு மதிக்க கோரி கைதிகள் போராட்டம் நடத்தினர். புழல் சிறையில் இருந்து உடல்நலக்குறைவு மற்றும் நோயின் தாக்கம் அதிகமுள்ளதாக பரிந் துரைக்கப்படும் கைதி களுக்கு சிகிச்சை அளிப் பதற்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த வார்டில் தற்போது 21 கைதிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த கைதிகளுக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி, ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் நோயாளி களுக்கு வழங்கப்படும் உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெறும் சில கைதி கள், தங்களுக்கு குடும்பத்தி னர் கொண்டு வரும் அசைவ உணவுகளை அனுமதிக்க வேண்டும் என ஞாயிற்றுக் கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தச்சூர்-பொன்னேரி சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை
திருவள்ளூர், ஜூலை 22- தச்சூர் - பொன்னேரி சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டைனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர் வழியாக தினமும் சென்று வருகின்றன. இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடி யாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது. வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரி சாலையில் சென்று வந்தன. இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத்பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொன்னேரி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறையினர் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங் களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
நீர்நிலைகளுக்கு சிறார்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்
வேலூர், ஜூலை 22 வேலூர் மாவட்டத்தில் குளம், குட்டை, ஏரி மற்றும் கல்குவாரி போன்ற நீர்நிலைகளுக்கு சிறு வர்கள் செல்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி,அறி வுறுத்தி யுள்ளார். வேலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் உட்பட பொது மக்கள் நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் இறங்குவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 3 மாத கால இடை வேளையில் நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிப்பது மற்றும் பொழுதுபோக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு 4 சிறுவர்கள் உயிரிழந்ததை ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார். நீர்நிலைகளில் பாது காப் பற்ற முறையில் குளிப்பது அல்லது பொழுது போக்குவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கல்குவாரி களில் உள்ள நீர்நிலைகளை எக்காரணம்கொண்டும் சிறு வர்கள் உட்பட பொது மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது. இது தொடர் பாக எச்சரிக்கை பலகை கள் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறியுளளார்.