districts

500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

 சென்னை,மே 15-

    முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதியன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வழிபாட்டு தளங்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.