தமிழ்நாட்டில் ஒரே அடையாள அட்டையை வைத்து வாங்கப்பட்ட 5,000 சிம்கார்டுகள்
சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் ஒரே அடையாள அட்டையை வைத்து 5,000 சிம்கார்டுகள் வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5,000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப் படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன் படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட சைபர் க்ரைம் காவல் துறையினரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. (உதாரணமாக முருகன் என்ற பெயரில் அவரது புகைப்பட அடையாளத்தை வைத்து 5 ஆயிரம் செல்போன் சிம்கள் பயன்படுத்தப்பட்ட வருகிறது). எத்தனை நபர்களின் அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் எவ்வளவு போலி யான சிம் கார்டுகள் இயங்கி வருகின்றன என்பது குறித்து மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர் கள் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 20 ஆயிரம் செல்போன் எண்களை சமீப காலங்களில் முடக்கியுள்ளதாகவும், மேற்கொண்டு முடக்க முயற்சித்து செய்து வருவதாகவும் மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் கணினிகள் மூலம் டெண்டர் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள்
அதிமுக அரசின் முறைகேட்டை வெளிப்படுத்திய சிஏஜி அறிக்கை
சென்னை, ஏப். 23- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்த தாரர்கள் டெண்டரை சமர்ப்பித்துள்ள தாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல் பாடுகள் குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சிஏஜி) தலைவரின் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்துள்ளதாக கூறப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒப்பந்த தாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப்பட்ட கணினியின் அடையாள முகவரியை யும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியையும் தரவுத் தளம் கைப்பற்றியது.
ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகை யில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களை சமர்ப்பிக்க நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளின் கணினி களைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரை 214 ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு களுக்கு பதில் அளிக்கும் விதமாக, 87 ஒப்பந்ததாரர்கள் துறை அதிகாரி களின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 289 ஏல ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதில் 71 ஏலங்கள் எல் 1 ஒப்பந்த தாரர்களுக்கு ஆதரவாக வழங்கப் பட்டன. ஏலதாரர்கள், துறை சார் கணினி களின் வாயிலாக ஏலங்களை சமர்ப்பித்தன் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும், அதிகபட்ச போட்டி ஏலத்தை பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை. மே 2022 இறுதி கலந்தாய்வின் போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதியளித் தார். அரசு இதை ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் 2022இல் இதுபோன்ற தவறு களை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத் தல் வழங்கப்பட்டதாக கூறியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பீரோ உடைத்து திருட்டு
மணிமங்கலம், ஏப்.23- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காவனூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். வெள்ளிக்கிழமை விஜய ரங்கன், அவரது மனைவி, 2 மகள்களும் வேலைக்கு சென்றுள்ளனர். மாலையில் விஜயரங்கனும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீன்ஸ் விலை குறைந்தது
போரூர்,ஏப்.23- சென்னை கோயம்பேடு சந்தைக்கு பீன்ஸ் வரத்து அதிகரிப்பால் விலைகுறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரத்து குறைவால் ரூ.120 வரை விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்துள்ளது. ஞாயிறன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக் காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அண்ணா பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினராக பரந்தாமன் நியமனம்
சென்னை,ஏப்.23- சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆட்சி குழு உறுப்பி னராக நியமனம் செய்வது வழக்கம். அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி குழு உறுப்பினரின் பதவிக் காலம் 12.9.2024 வரை ஆகும்.
மின்வேலியால் உயிரிழப்பு
திருவள்ளூர், ஏப்.23- கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வலசை வெட்டிக்காடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (37). இவர் சனிக்கிழமையன்று இரவு வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற தனசேகரன் பல மணி நேரம் ஆன பிறகும் வீட்டு திரும்பவில்லை.இதையடுத்து தனசேகரை தேடி சென்ற போது தாமோதரன் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி அருகே அவர் இறந்துகிடந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்தபோது விவசாயி தாமோதரனுக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தில் வேர்க்கடலை, மிளகாய் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றி களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க அனுமதி பெறாமல் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி பலி
பெரியபாளையம்,ஏப்.23- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ரூபி பிரிக்ஸ் சேம்பர் என்ற தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஒடிசா மாநிலம்,பலாங்கீர் மாவட்டம்,மால்பார கிராமத்தைச் சேர்ந்த தாராசந்த் பாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வந்து தங்கி இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில்,சனிக்கிழமையன்று மாலை இங்குள்ள தண்ணீர் தொட்டியில் தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா(வயது 4) விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவள் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கினாள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி 130 சொத்துக்கள் கண்டுபிடிப்பு
சென்னை.ஏப்,23- ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. குறிப்பாக, பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் சொத்து முடக்கம் மற்றும் கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்ப தாகவும், ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை கண்டு பிடித்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் முடக்கி அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாராய ஊறல் அழிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மது விலக்கு காவல்துறை யினர் தீவிர கள்ள சாராய தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு எல்லைக்குட் பட்ட மூஞ்சுராம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டு பிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. தலை மறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாணவியிடம் தகாத செயல்: தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும்
சிபிஎம் வலியுறுத்தல்
விழுப்புரம்,ஏப்.23- விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் வட்டத்திற்கு உட்பட்ட விட்டலா புரத்தில் 14 வயது பள்ளி மாணவி யிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் அறிக்கை விடுத்துள்ளார். திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட விட்டலா புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சகலகலாதரன் வயது (59) என்பவர் வருகை பதிவேடு நோட்டை வைக்க வந்த போது மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படு கிறது. இதையொட்டி பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் காவல் நிலை யத்தில் புகார்அளித்தனர். அதனால் புகார் மீது காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த தலைமை ஆசி ரியருக்கு ஆதரவாக காவல்துறை யினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை அறிய சிபிஎம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன், நகர செயலாளர் குமரேசன் ஆகியோர் ஞாயிறன்று (ஏப்.23) அன்று பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு நடத்தினர்.
தியாகதுருகத்தில் மாடு திருடிய 3பேர் கைது
கள்ளக்குறிச்சி, ஏப், 23- தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ள னர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாக துருகம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கிருஷ்ணகிரி,ஏப்.23 – ஊத்தங்கரை வட்டம், கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் திருப்பூர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வா (வயது30), மகள் இனியா(8),மகன் கோகுலகிருஷ்ணன் (4) மூவரும் மாமனார் வீட்டு அருகில் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். எம்.எஸ்.சி.முதுகலை கணித பட்டதாரியான தெய்வா அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்கு படித்து தொடர்ந்து பல தேர்வுகள் எழுதிவந்தார். சமீப நாட்களாக தெய்வா யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று நிசப்தமாக இருந்த தெய்வா வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தனர். தெய்வா உத்திரத்தில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 3 உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தெய்வாவின் தாய் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை மற்றும் ஆய்வில் தெய்வா அளவுக்கு அதிக மான மாத்திரைகளை கரைத்து குடிக்கக் கொடுத்ததால் 2 குழந்தைகளும் இறந்ததாக தெரிகிறது. தெய்வாவிடம் மாமனார் ஆறுமுகம், அடிக்கடி தகராறு செய்ததால் மனமுடைந்த தெய்வா இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உடனே உதவிய ஆட்சியர்
கள்ளக்குறிச்சி, ஏப்.23- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி . இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார்.
வட்ஸ் அப்பில் புதிய வசதி
சென்னை.ஏப்,23- வட்ஸ்அப் செயலியில் “Keep in Chat” என்ற புதிய தயாரிப்பை அதன் நிறுவனர் மார்க் சூப்பர்பெர்க் அறிவித்துள்ளார். இது மறைந்து போகும் செய்திகளைக் கொண்ட அரட்டையில் இருப்பவர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளைச் சேமிக்க அனுமதிக்கிறது. மறைந்துபோகும் செய்திகளுடன் உரையாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியதில்லை - தனிப்பட்ட விவாதங்களைப் போலவே. இந்த கூடுதல் தனியுரிமை அடுக்கு தவறான கைகளில் இருந்து செய்திகளைப் பாதுகாக்கிறது, சில நேரங்களில் நீங்கள் வைத்திருக்க விரும்பும் குரல் குறிப்பு அல்லது முக்கிய தகவல் உள்ளது. உங்கள் செய்தியை மற்றவர்கள் வைத்திருக்க முடி யாது என நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் முடிவே இறுதியானது, வேறு யாரும் அதை வைத்திருக்க முடியாது மற்றும் டைமர் காலாவதியாகும் போது செய்தி நீக்கப்படும். இந்த வழியில் நீங்கள் அனுப்பும் செய்தி கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றிய இறுதிக் கருத்து உங்களுக்கு உள்ளது என்று வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.