districts

44வது செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசு, சதுரங்க கூட்டமைப்பு இடையே ஒப்பந்தம்

சென்னை, மே 14- 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022  போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் சனிக்கிழமை (மே 14) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தா னது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி யானது மாமல்லபுரத்தில் ஜூலை   28ஆம் தேதி முதல் ஆகஸ்ட்  10 ஆம்தேதி வரை  நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வ தேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயி ரத்திற்கும்  மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் மே 11 சனிக்கிழமையன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே கையெழுத்தா னது. இதனைத் தொடர்ந்து, 44வது செஸ்  ஒலிம்பியாட் 2022 போட்டியில் பங்கேற்க வுள்ள சதுரங்க வீரர் மற்றும் வீராங்கனை கள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்  தித்து வாழ்த்துப் பெற்றனர். இதில்  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, துறையின் முதன்மைச் செய லாளர் அபூர்வா, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.