districts

img

4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும்

4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணபலன் உச்சநீதிமன்ற தீர்ப்பினை உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி16 அகில இந்திய வேலை நிறுத்தம் விளக்கி செவ்வாய்கிழமை (பிப்.13) காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு சங்க நிர்வாகி ஆர்.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல பொதுச் செயலாளர் பி.சினிவாசன், நிர்வாகிகள் என்.நந்தகோபால், ஜி.கமலக்கண்ணன், ஆர்.மதுசூதனன், ஓய்வு பெற்ற நல அமைப்பு நிர்வாகிகள் ஜி.ராமச்சந்திரன் என்.சரங்கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.