சென்னையில் போதை மாத்திரை விற்பனை: 4 பேர் கைது
சென்னை, ஜன. 4- சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1,200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடையே வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக வடசென்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ் என்பவரை, 50 மாத்திரைகளோடு காவல்துறையினர் கைது செய்தனர். கணேசிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். மேலும் ஆந்திராவில் இருந்து கொரியர் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. ஸ்டீபன் என்பவர் வட மாநிலங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் ஆர்டர் செய்து சீனிவாசனுக்கு கொடுத்ததும் தெரியவந்தது. குறிப்பாக ஆன்லைன் விற்பனை தளத்தில் வலி நிவாரணி மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமல் அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர். 300 ரூபாய்க்கு போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி 5,000 ரூபாய்க்கு மொத்தமாக விற்பனை செய்வதும் தெரிய வந்தது. வடசென்னை பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் கிடைக்காமல் போதைக்காக அலை யும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஸ்டீபன் ஆகியோரிடம் இருந்து 600 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் முக்தியால்பேட்டையில் சுல்தான் அலாவுதீன் என்ற மருந்து விற்பனை செய்யும் பிரதி நிதியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 630 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
ஒசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கு 6.45 கோடியில் வகுப்பறைகள் ஆணையர் சினேகா தகவல்
கிருஷ்ணகிரி,ஜன.4- ஒசூா் மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 6.45 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என மாநகராட்சி ஆணையா் சினேகா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா அறிவுறுத்தியுள்ள படி, பள்ளி மேம்பாட்டு மானியம் - மூலதன பணியின் 2023-24 இன் கீழ் 15 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ரூ. 6.45 கோடி மதிப்பீட்டிலும்,இயக்கம் பராமரிப்புப் பணி 2023-24 இன் கீழ் 11 பள்ளிகளில் உணவு உண்ணும் கூடங்கள், கழிவறைகள், குடிநீா்த் தேக்கத் தொட்டிகள், மேற்கூரை பழுதுபாா்த்தல், சுற்றுச்சுவா் கட்டுதல் மழைநீா் வடிகால்வாய் அமைத்தல் பராமரிப்புப் பணிகள் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டிலும் தொடங்கப்படவுள்ளன என மாநகராட்சி ஆணையா் தெரித்தார்..
ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் கடலூரில் துவங்கியது
கடலூர், ஜன.4- அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஜனவரி 4 முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, சென்னை, கடலூர், விழுப்புரம், வேலுார் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. ஆட்சேர்ப்பு முகாமையொட்டி, அண்ணா விளை யாட்டரங்கில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டரங்கம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது முகாமில் பங்கேற்றவர்களுக்கு, தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உடல் தகுதி திறன் பரிசோதிக்கப்பட்டது.
சாலை விபத்தில் மாணவன் பலி
கிருஷ்ணகிரி, ஜன.4- தேன்கனிக்கோட்டை வட்டம் கொத்த ஜீகூரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் தேஜஸ் பேலகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். புதன்கிழமை ஆனைக்கல் பூனப்பள்ளி சாலையில் இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த சக்கர சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.