போதைக்கு எதிராக 3 ஆயிரம் பேர் பங்கேற்ற சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிறன்று (ஏப்.30) நடைபெற்றது. “போதையற்ற தமிழ்நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலம் தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக மாற்று ஊடக மையம் மற்றும் வாலிபர் சங்க வடசென்னை மாவட்டக் குழு சார்பில் 3 மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் மற்றும் 1,000 இளைஞர்கள் பங்கேற்ற பறையிசை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், பேராசிரியர் இரா.காளீஸ்வரன், எழுத்தாளர் லதா சரவணன், மக்கள் மருத்துவர் சரத்ராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன், தலைவர். ஜி.நித்தியராஜ், பொருளாளர் அ.விஜய், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.அபிராபி, ஆர்.தமிழ்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஸ்டாலின், எஸ்.கார்த்தி, கே.சுரேஷ், சா.நீதிதேவன், பகுதி செயலாளர் டி.பி.ராஜா ஆகியோர் இதில் பேசினர்.