ஆவடி, ஆக. 17-
ஆவடியில் 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலி யல் சீண்டல் கொடுத்த 3 மாணவர்கள் கைது செய்யப் பட்டனர்.
ஆவடி பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி யில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 3 மாணவர்களை கைது செய்தனர்.