districts

சாலை விபத்தில் 3 பேர் பலி

கடலூர், ஜூலை 11-

      நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்திய சீலன் (38). இவர் சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். சென்னை யிலிருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை பிரதான சாலையில் சென்ற போது, எதிரில்வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்திய சீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாய மடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளான வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர்.