districts

3 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை!

சென்னை, ஏப்.18- தமிழகத்தில் புதிதாக மூன்று பேருக்கு முதியோர்  உதவித்தொகை வழங்கப் படும் என்று சட்டப்பேர வையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்‌.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் திங்களன்று வரு வாய் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தமிழகத்தில், நடப்பாண்டில் புதிதாக 3 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைத்து சான்றுகளை யும் செல்போன்கள் மூலம் பெறும் வகையில் இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழுதடைந்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நரசிங்க ராயப்பேட்டை கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலம் உள்ளது. இங்கு நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை மக்க ளுக்கு வகைப்பாடு மாற்றம்  செய்து பட்டா வழங்கப்படும் இதன் மூலம் சுமார் 350 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் அமைச்சர் தெரி வித்தார்.