திருவண்ணாமலை,ஜன.15- திருவண்ணாமலை அடுத்த சு.கம்புப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாபுக்கான். இவரது மனைவி தில்சாத். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ள னர். இந்நிலையில் சனிக் கிழமை 14 வயதுள்ள இரட்டை யரான நஸ்ரின், நசீமா, 12 வயதுள்ள ஷாகிரா ஆகி யோர் மாட்டுப் பொங்கலை யொட்டி, கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற குழந்தை கள் தண்ணீரில் மூழ்கி பலி யாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிறுமிகளின் சட லங்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக திரு வண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்த ஏரி பகுதியில், திரு வண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.