districts

தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மெரினா கடற்கரையில் பார்வையிடலாம்

சென்னை, பிப்.18 டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒன்றிய அரசால் நிரகாரிக்கப்பட்ட தமிழக அரசின்  அலங்கார ஊர்திகள் வருகிற 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட  ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- சென்னையில் ஜனவரி 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்க ளின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடி வமைக்கப்பட்டு அணி வகுப்பில் பங்கேற்று பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டு தலையும் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 26-ந்தேதி சென்னை, தீவுத்திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில், 3 அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப் படுத்தும் பொருட்டு, கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

அமைச்சர்கள், மாவட்ட ஆட்சி யர்கள் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாவட்டங்களில் அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட ஏற்பாடு செய்தனர். சென்னை மாநகருக்குள் இன்று மாலை அலங்கார ஊர்திகள் வர இருக்கிறது. இந்த அலங்கார ஊர்திகள் வருகிற 20ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும். வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி, பாரதியார் உள்ளிட்ட சுதந்திரத்துக்காக பாடு பட்டவர்களின் அலங்கார ஊர்தி, பெரியார் அலங்கார ஊர்தி ஆகிய 3 ஊர்திகள் பொதுமக்கள் பார்வை யிடலாம் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மாவட்ட எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பார்வையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.