தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், பொது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு துறைகளின் பல சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு. தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் வீடுகள் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதல மைச்சர் அறிவித்துள்ளார். ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து குடிசை வீடுகளையும். கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 58,710 குடிசை வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் கடலூர் மாவட்டத்தில் 58,710 குடிசை வீடுகள் உள்ளன. சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் தகுதியான குடும்பங்களில் பட்டா இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அந்தப் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, "குடிசை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.” தேர்வுக்குழு ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் தகுதியினை கள ஆய்வு செய்து. வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரை. மீதமுள்ள 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருள்கொண்ட மற்ற வகை கூரையாக அமைக்கலாம். இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது. 3500 பயனாளிகளுக்கு ஆணை அதன்படி, கடலூர்-290. அண்ணாகிராமம்-285, பண்ருட்டி-315, குறிஞ்சிப்பாடி- 300. காட்டு மன்னார்கோயில்-170. குமராட்சி-260. கீரப்பாளையம்-260, மேல்புவனகிரி- 280, பரங்கிப்பேட்டை-180. விருத்தாசலம்-270. கம்மாபுரம்-210. நல்லூர்-185. மங்களூர்- 235. ஸ்ரீமுஷ்ணம்-260 என கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 3,500 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஆணை வழங்கப்பட்டு பல்வேறு நிலை களில் கட்டுமானப் பணிகள் நடை பெற்றுவருகிறது. ரூ. ஒரு லட்சம் கூட்டுறவு கடன் ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர் காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். பய னாளிகளின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு உதவிடும் பொருட்டு மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் இதுவரை சுமார் 352 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அவையின்றி. தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நட வடிக்கை எடுத்து வருகிறார். தொகுப்பு: அ.கொ.நாகராஜபூபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர் மாவட்டம்.