districts

img

ரெட்டிச்சாவடி அருகே பேருந்துகள் மோதல்: 29 பயணிகள் காயம்

 கடலூர்,மே 12-  சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்  கொண்டு ஞாயிறன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சட்டத்துடன் மோதி நின்றது.  அதே சமயம் அரசு பேருந்துக்கு பின்னால் தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் அரசு மற்றும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனை மற்றும் புதுச்சேரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். இந்த விபத்தில் 29 பயணிகள் காயமடைந் துள்ளனர். அவர்களுக்கு  மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் அரசு பேருந்து முன்புறம் முழுமையாக சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக இடுப்பாடுகளுக்குள் இருந்த இரண்டு பேருந்துகளையும் மீட்டனர்.  இந்த விபத்து காரணமாக கடலூர் புதுச்சேரி சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் நடுவில் அமைக்கப்பட்ட தடுப்பு கட்டையில் பிரதிபலிப்பான் உள்ளிட்ட எந்தவித அறிவிப்பும் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். சாலையின் நடுவில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு விபத்துக்கள் நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.