சென்னை, டிச. 30 - சென்னையில் மட்டும் 23 ஆயிரம் வீடுகள் சேதம டைந்து வாழத் தகுதியற்ற வையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள் ளார். திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு இடிந்ததை அடுத்து குடியி ருப்புகளை ஆய்வு செய்வ தற்காக அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்ப வல்லு நர்குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவினர் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் மந்தைவெளியில் உள்ள ராஜாமுத்தையாபுரம் பகுதியில் உள்ள குடியிருப் புகளில் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் மட்டுமே 23 வீடுகள் வாழத் தகுதியற்ற வையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இதற்காக முதல் கட்டமாக ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சிதிலமடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் இடிந்த வீடுகளில் வசித்தவர்க ளுக்கு மாற்று வீடுகள் ஒதுக் கப்பட்டுள்ளது என்றார்.