சென்னை, நவ. 11 - ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தென்சென்னையில் ஒருவார கால பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் பொருளாதார கொள் கையை எதிர்த்து நவ. 8-15 தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக் கத்தை நடத்தியது. இதனையொட்டி தென்சென்னை மாவட்டத்தில் நவ.7ந் தேதி தொடங்கி பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. இதனையொட்டி தென்சென்னை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் 200 குழுக்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஒவ்வொரு குழுவும் 500 வீடுகளை சந்தித்து மக்களோடு உரையாடின. ஒரு வாரத்தில் சுமார் ஒரு லட்சம் இல்லங்களை சந்தித்து பிரச்சாரம் செய்தன. அரங்க இடைக்குழுக்கள், சிறப்பு கிளை கள் போன்றவையும் அதனதன் தன்மைக் கேற்ப மார்க்கெட்டுகள், பேருந்து நிலை யங்கள், தெருச்சந்திப்புகள், அலுவல கங்கள், வளாகங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டன. இவ்வாறாக சுமார் 4 லட்சம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தன. ஆங்காங்கே பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தின. ஒன்றிய அரசின் பொருளாதார மற்றும் சர்வதேச கொள்கைகள், வகுப்புவாத வெறி பிரச்சாரங்கள், விலைவாசி உயர்வு, அரசி யலமைப்பு சட்ட சிதைப்பு, ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்பாடுகளை எடுத்துக்கூறி மக்களோடு குழுக்கள் உரையாடின. ஜன நாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பது, சாதி ஆணவக்கொலை போன்றவற்றில் மாநில அரசின் தவறான அணுகுமுறை, உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமை போன்றவற்றையும் பிரச்சாரத் தில் குழுக்கள் எடுத்துரைத்தன. இந்த இயக்கத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.