districts

img

ரூ.2.75 லட்சம் பறிமுதல்

அம்பத்தூர், ஏப். 7- பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.75 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிறன்று (ஏப். 7) பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி  விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவள்ளூர் அருகே வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ராம்லால் என தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதே போல், பறக்கும் படையினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரண்வாயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன் என்பவர் வைத்திருந்த 95 ஆயிரம் ரூபய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.