சென்னை, மார்ச் 30 - மத்திய பிரதேச மாநிலத் தலை நகர் போபால் -– சென்னை இடையே நேரடி விமான சேவையை சிவில் விமா னப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியாவும் இணையமைச்சர் வி.கே.சிங்கும் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்கான், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், வடசென்னை மக்க ளவை உறுப்பினர் டாக்டர் வீராசாமி கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்ட னர். 150 இருக்கைகள் கொண்ட ஏ320 பயணிகள் விமானம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்துடன் போபாலிலிருந்து தினந்தோறும் சராசரியாக 10 விமானங்கள் புறப்பட்டுச் செல்லும். சென்னையில் இரண்டாவது விமான நிலையப் பணிகள் குறித்து பேசிய சிந்தியா, இதற்காக 4 இடங்கள் மாநில அரசால் மத்திய அமைச்சகத் திற்கு ஆலோசனைகளாக வரப் பெற்றதாகவும் இவற்றிலிருந்து இரண்டு தெரிவு செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் வி.கே.சிங் பேசுகை யில், இந்தப் பணியில் ஈடுபாடு காட்டிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச் சகம், தமிழ்நாடு அரசு, மத்தியப்பிர தேச அரசு ஆகியவற்றின் அதிகாரிக ளுக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக கூறினார். இந்த விமான சேவை பிராந்திய தொடர்பை விரிவுபடுத்து வது மட்டுமின்றி இரு நகரங்களுக்கு இடையே வர்த்தகம், வணிகம், சுற்றுலா ஆகியவற்றையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.