விழுப்புரம், ஜூன் 8- கேரள மாநிலம் குமுளியைச் சேர்ந்தவர் ஷாஜி (52). புகைப்படக் கலைஞரான இவர், பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்து வந்தார். இந்நிலையில் ஷாஜி செவ்வாய்க்கிழமை குமுளியி லிருந்து சென்னைக்கு தனது மனைவி சுவிதாவுடன் (45) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஆபிரகாம் (28) ஓட்டி வந்தார். இவர்களது கார் கள்ளக் குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைக் கடந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தது. விழுப்புரம் அருகே பேரங்கியூர் பகுதியில் கார் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் ஓட்டுநர் ஆபிரகாம், ஷாஜி ஆகியோர் சம்பவ இடத்திலியே பலியானார்கள்.