districts

வாக்காளர் பட்டியலில் 18 வயதுடையோர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் 6 கோடி 12 லட்சம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங் களை முன்கூட்டியே வழங்கு வதற்கு அறி வுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளை ஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள லாம். மே 31 புதனன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் களாக 1,23,064 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

51,295 வாக்காளர் கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.  மேலும் 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904; பெண் வாக்காளர்கள் 3,11,09,813, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த  வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர் கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணி க்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 612. அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 1.4.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;