திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வெள்ளியன்று (பிப் 2) ரூ.17.77 கோடியில் மதிப்பீட்டியில் அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.52.93 லட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு என மொத்தம் ரூ.18.30 கோடி மதிப்பீட்டியில் 2 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை இயக்குநர் .இளகோமகேஷ்வரன், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.